26.3.20

இரக்கமில்லாத பிசிசிஐ!


நானும் உங்களைப்போன்று கிரிக்கெட் ரசிகன் தான். ஆனால் சில நேரங்களில் என்னையும் மீறி எரிச்சலடையச் செய்கிறது அதன் நிர்வாகத்தினால்.

உயிர் பயத்தில் உலகப்போர்!
கொரோனா எனும் உயிரியல் போரில் உலகம் முழுவதும் உயிரைக்கையில் பிடித்துக்கொண்டு வீட்டிலேயேத் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கும் ஒரு கொடுமையை இந்த நூற்றாண்டில் பெற்றுக்கொண்டிருக்கும் நாம் பெருமைக்குரியவர்கள் அல்ல!
இப்பொழுது வரை ( March 26, 2020, 13:12 GMT ) நேரத்தின் படி உலகெங்கும் கொரோனாவால் 198 நாடுகளில் பாதிக்கபட்டோரின் எண்ணிக்கை 4,71,802 , அதில் இறந்தவர்களின் எண்னிக்கையோ 21,297  https://www.worldometers.info/coronavirus/#page-top  எனும் நிலையில் இன்னும்  எத்தனை உயிர்களை காவு வாங்க இருக்கும்? என்று ரத்தத்தை உறைய வைத்துக்கொண்டிருக்கின்றது.

கொரோனாவைப்பற்றி!


இவ்வாறு உலகம் முழுவதும் உள்ள நாடுகள்  தன் மக்களை போராடிக்கொண்டிருக்கும் வேளையில் இந்திய நாடும் அதற்கு தயாராகி களமிறங்கியிருக்கிறது என்றால் அது உண்மைதான் .
கடந்த மார்ச் 22 ஆம் தேதி ஒரு நாள் மக்கள் ஊரடங்கு  எனும் பெயரில் அறிவித்தார் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள். அதுவும் ஓரளவிற்கு மட்டுமே நிறைவேறிய நிலையில் இதற்கு மேலும் தாமதித்தால் உயிரிழப்புகளை கட்டுப்படுத்த முடியாதென்பதைக் கருதி 24 ஆம் தேதி இரவு 8 மணிக்கு அவரது வழக்கமான மனதின் குரலின் மூலமாக நாட்டுமக்களுக்கு இந்த நோயின் வேகம் குறித்தும், தாக்கம் குறித்தும் ஓரளவிற்கு சொன்ன அவர் அதனைக்கட்டுப்படுத்த வேறு வழியின்றி 21 நாள் ஊரடங்கு உத்தரவை அறிவித்தார்.
அவர் அதில் சொல்லியது ஒன்று மட்டும் தான். அது "தனியார் நிறுவனங்கள்" தங்களது தொழிலாளர்களுக்கு ஊதியத்தை வழங்குங்கள் என்று.!

கிரிக்கெட் சங்கங்களின் பங்களிப்பு!
இலங்கையும் இந்த கொரோனாவால் பாதிக்கபட்டுள்ளது. இந்திய பொருளாதாரத்தை விட மிகவும் பின்தங்கியுள்ள இலங்கை நாட்டின் கிரிக்கெட் சங்கம் தன்னுடைய பங்களிப்பாக 25 மில்லியன் இலங்கை ரூபாய் வழங்கியுள்ளது.
https://www.indiatoday.in/sports/cricket/story/sri-lanka-cricket-board-lkr-25-million-grant-coronavirus-1658732-2020-03-23

பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கம் தன்னுடைய அரசாங்கத்தின் நிதிக்கு ரூ.5 மில்லியனை வழங்கியுள்ளது. https://news.abplive.com/sports/pakistan-cricketers-to-donate-rs-5-mn-to-govt-emergency-fund-to-fight-covid-19-pandemic-1182623

பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்கள் தங்களுடைய நாட்டு மக்களுக்காக தங்களுடைய 15 நாள் ஊதியத்தை வழங்கியிருக்கின்றனர். https://sports.ndtv.com/cricket/coronavirus-bangladesh-cricketers-donate-half-month-salary-to-government-relief-fund-2200749

இரக்கமில்லாத பிசிசிஐ!
பிசிசிஐ எனும் பெயரை கிரிக்கெட் விளையாடுபவர்கள், ஆர்வலர்கள் அதனை எதிர்ப்பவர்கள் என பல்வேறு தரப்பினருக்கும் தெரியும் என்பதால் தான் இந்த தலைப்பை வைக்கச் செய்தது.
அது என்ன எதிர்ப்பவர்கள் என்று படிப்பவர்களுக்கு தோன்றலாம் நாம் ஏன் எதிர்க்கிறார்கள் என்றால் அது ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரால் திட்டமிட்டு ஆரம்பிக்கப்பட்டு இன்றுவரை அந்த குடுமி அவர்கள் கையில் தான் இருக்கிறது. 
உலக கிரிக்கெட் அமைப்புகளில் வருமானம் ஈட்டுதலில் முதல் இடத்தை பல வருடங்களாக தக்கவைத்துள்ளது இந்த பிசிசிஐ.  https://cricket.yahoo.net/news/top-10-most-affluent-cricket-182300645
உலகத்தில் முதல் முதலாக கிரிக்கெட்டை தொடங்கியவர்களே தொடமுடியாத தூரத்தில் ( விண்ணுக்கும்-மண்ணுக்கும்) இருக்கிறது இந்திய கிரிக்கெட் சங்கம். அதன் சொத்து மதிப்பானது சுமார் ரூ.15,000/-கோடி ( பதினைந்தாயிரம் கோடிகள் ) இருக்கும் என்று இணையதள ஆதாரச் செய்திகள் தரவுகள் தருகின்றன. 

 https://www.quora.com/How-did-BCCI-become-one-of-the-richest-sports-organizations-in-the-world

இதையும் தாண்டி இந்த சங்கத்தின் ஆதரவுடன் ஆரம்பிக்கப்பட்ட ஐபில் மூலமாகவும் பல கோடிகள் புரண்டு கொண்டிருக்கும் பிசிசிஐ!

அதோடு மட்டுமல்லாமல் பல்வேறு பரிணாமங்களில் வருவாய் ஈட்டிக்கொண்டிருக்கும் பிசிசிஐ என்றால் அது மிகையாகாது.  பிசிசிஐ அறிவிப்பின் படி இந்திய பொருளாதாரத்தில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ரூ.1203,64,00,000 கோடிகளை 2015 ஐபில் சீசனில் பகிரப்பட்டுள்ளது என்று தரவுகள் தருகின்றன. https://en.wikipedia.org/wiki/Indian_Premier_League#Foundation

மேலும் கூடுதலாக கடந்தாண்டு 2019 நடந்த ஐபில் ன்  மதிப்பான ( Brand Value  ) ரூ.3576,51,25,000 கோடிகள் என்று டஃப் அன்ட் பெல்ப்ஸ் தெரிவித்துள்ளது.  https://en.wikipedia.org/wiki/Indian_Premier_League#Foundation , https://www.duffandphelps.com/


இந்நிலையில் தான் இன்று பிசிசிஐ ன் தற்போதைய தலைவரும், முன்னால் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவரும், முன்னாள் கொல்கத்தா கிரிக்கெட் அணியின் தலைவருமான திரு.சவ்ரவ் கங்கூலி அவர்கள் ரூ.50 லட்சத்தை கொரோனாக்கெதிரான நிதிக்காக வழங்கியுள்ளார்.

பலகோடி, கடைக்கோடி ரசிகர்களின் பணத்தில் செழித்து,வளமுடன் இருக்கும் இந்த சங்கங்கள் தான் இந்த இக்கட்டான தருணத்தில் உதவ முன் வராமல் இருப்பது வருத்தமளிக்கிறது. ஒரு வேளை இந்திய நாத்திகவாதிகள், சமூக நீதியாளர்கள் எப்பொழுதும் சொல்லும் ஒரு விடயம்; இந்த இந்திய கிரிக்கெட் சங்கம் பார்ப்பனர்கள் பிடியில் இருக்கும் வரை நம்மவர்கள் அதனை வேடிக்கை தான் பார்க்க இயலும் என்பது உண்மை தானோ? என்று யோசிக்க வைக்கிறது.

இப்போது நீங்களே சொல்லுங்கள் இதற்கு இந்த தலைப்பு வைத்தது சரிதானே? 

- நாடற்றவன்
  26.03.2020



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக