15.3.20

கொரோனாவின் உலகப்போர்!

போர் ஆயுதங்கள்,தளவாடங்களுடன் தரைப்படைகள், வான்படைகள், கடல்படைகள் என பல உயிர்பலிகளுடன் நடைபெற்ற முடிந்த இரண்டு உலகப்போர்களை பார்த்த உலகநாடுகள், தாங்கள் இதுவரை காணாத ஒரு உலகப்போரினை எதிர்கொண்டுள்ளனர்.
இன்று கத்தியின்றி, ரத்தமின்றி சந்தித்திருக்கும் மூன்றாம் உலகப்போர் தான் இந்த "கொரோனா" ( கோவிட்-19 ) ( Coronavirus- Covid-19)  எனும் உயிர்க்கொல்லி வைரஸ்.

மார்ச் 15 -2020 அதிகாலை 5.20 பதிவு செய்யப்பட்ட தகவலின் படி உலகம் முழுவதும் 152 நாடுகளில் பரந்து சென்று கொண்டிருக்கிறது இந்த கொரோனா!
கொரோனா வின் பிறப்பிடம்!
சீனாவின் ஊபேய் மாகாணத்தின் தலைநகர் ஊகானில் 2019 ஆண்டின் டிசம்பர் இறுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸானது விலங்கில் இருந்து மனிதனுக்கு பரவியுள்ள தொற்றுநோய். இதன் பின்னர் ஜனவரி 30 ல் உலக சுகாதார அமைப்பு இத்தொற்றுபரவலை  பொது சுகாதார பண்பாட்டு அவசரநிலையாக ( PHEIC )  அறிவித்தது. அதனைத் தொடர்ந்து மார்ச் 12 -2020 அன்று இந்த கொரோனா- கோவிட் 19 யை உலக தொற்று நோய் என்று உலக சுகாதார அமைப்பு ( WHO ) அறிவித்ததோடு மட்டுமல்லாமல் அதற்கெதிராக அவசர தீவிர நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அறைக்கூவல் விடுத்துள்ளார் ஐநா வின் பொதுச்செயலாளர்  ஆன்டெனியோ குட்டரெஸ்.
இந்நோய் குறித்து சீன அரசினை எச்சரித்த 34 வயதான சீன மருத்துவர் இலீ வென்லியாங்க் .



கொரோனாவின் ஆட்டம்!
உலகம் முழுவதும் கொரோனாவால் 1,56,760 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 5,839 பேர் இறந்துள்ளனர் மேலும் 5,652 பேர் தீவிர அவசரசிகிச்சைப்ப்பிரிவிலும், 69,332 பேர் ஆரம்பகட்ட நிலையிலும் இருக்கின்றனர். இதில் ஆறுதலான விடயம் என்னவென்றால் 75,937 பேர் அதிதீவிர சிகிச்சைக்குப்பிறகு குணமடைந்துள்ளனர்.
அதிகபட்சமாக இறந்தவர்கள் எண்ணிக்கையில் முறையே சீனா-3,209 பேரும், இத்தாலி-1441 பேரும், ஈரான்-611 பேரும் முதல் மூன்று இடங்களில் இருந்து வருகின்றது. இதில் கடைசியாக அமெரிக்காவின் விர்ஜின் தீவில் ஒருவருக்கு கண்டுபிடிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருக்கிறார். உலகம் முழுவதும் மணிக்கணக்கில் பரவிக்கொண்டிருக்கிறது.




இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை!..
இந்தியாவில் இன்றைய காலை நிலவரப்படி 100 பேர் கண்டுபிடிக்கப்பட்டு அதில் இரண்டு பேர் இறந்துள்ளனர் மேலும் 88 பேர் தீவிர கண்கானிப்பிலும் , 10 பேர் குணமடைந்துள்ளனர். இது இந்தியாவை இதோட விட்டு வைத்துவிடாது.. ஏனென்றால் உலக மக்கள் தொகையில் இரண்டாம் இடத்தில் இருக்கும் நாடு இந்தியா ஆனால் சுகாதாரத்திலோ அல்லது முன்னெச்சரிக்கையிலோ இன்னும் வளர்ந்த நாடுகள் , குறிப்பாக சீனா அளவிற்கு இல்லாததால் இக்கொரோனா தொற்று அதிவேகமாக பரவிக்கொண்டிருக்கிறது.

கொரோனா எவ்வாறு பரவுகிறது?
கொரோனாவானது மனிதர்கள் மூலமாக மனிதர்களுக்கு பரவுகிறது அவற்றை ஒன்றன் பின் ஒன்றாக பார்க்கலாம்.
1. இருமுவதால் ( தும்மல்)
2. மூக்கு, கண் மற்றும் வாய்கள் வழியாக 
3. கை விரல்களின்  மூலமாக
கொரோனாவை கண்டுபிடிப்பதற்கு 2 முதல் 14 நான்கு நாட்களை வரை ஆகலாம்.

கொரோனாவின் அறிகுறிகள்!
உலகளவில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள அறிகுறிகள்..
1.காய்ச்சல்
2.இருமல்
3.மூச்சுத்திணறல்
4. உடம்புவலி
5. குழப்பம்
6. தலைவலி
7. நெஞ்சுவலி
8. தொடர்ந்து மூக்கு ஒழுகுதல்
9. வயிற்றுப்போக்கு
10. வாந்தி
மேலும் இந்த கொரோனா இதயநோயாளிகள், நீரழிவு நோயாளிகள், புற்றுநோயாளிகள் என எவரையும் விட்டு வைக்கவில்லை.
இதுவரை இறந்தவர்களின் தரவுகள் அடிப்படையில் பெண்களை விட இரண்டுமடங்கு ஆண்கள் தான்.
மேற்கண்டவைகளில் ஏதேனும் இருந்தால் உடனடியாக அருகிலுள்ள அரசு சுகாதார மையத்தினை அணுகவும்.

வதந்திகள்!
1. வெயில் அதிகமாக இருக்கும் நகரங்களில் வராது
2. வயதானவர்களை மட்டும் தொற்றுக்கொள்ளும்
3. மாட்டு மூத்திரம் குடித்தால் குண்மாகிவிடும்
4. குடிப்பவர்களுக்கு வராது
5. மஞ்சள் அதிகமாக எடுத்துக்கொண்டால் வராது
6. கோழிக்கறி சாப்பிடுவதால்

ஆன்மிகத்தால் சாத்தியமாகதது அறிவியலால் சாத்தியமாக்கியிருக்கிறது!

ஆம் உலகெங்கும் உள்ள பெரும்பான்மையான மதங்களின் பிடியில் தான் பல்வேறு மக்கள் பிடித்துவைக்கப்பட்டுள்ளனர். அது கிரிஸ்துவம், இஸ்லாம் மற்றும் இந்து மதம் உட்பட மதங்கள் பரவிக்கிடக்கின்றன ஆனால் இந்த கொரோனாவை இவைகளால் கட்டுப்படுத்த முடியவில்லை ஏனென்ன்றால் இவைகள் எல்லா கற்பனைகள் என்பது தற்பொழுது அம்பலமாகிக்கொண்டிருக்கின்றன.
இந்துக்கள் கோவிலுக்கு வராதீர்கள் என்று திருப்பதி முதல் சபரிமலை வரை கூவிக்கொண்டிருக்கின்றனhttps://www.patrikai.com/coronavirus-restrictions-in-tirupati/


ஏசு கிருஸ்து பிறந்த பெத்லகமே கேள்விக்குள்ளாகியுள்ளது! வாடிகன்


கிருஸ்துவ சர்ச்களின் நிலையும் அதே நிலைதான்.

சரி இவர்கள் இருவரில் இருந்து மாறுபட்ட இஸ்லாம் மதம் என்று பறைசாற்றிக்கொள்ளும் மெக்காவின் நிலையும் இவர்களுக்கு சரிசமமாக இருக்கிறது↓



மருத்துவர்கள் "கை"ப்பற்றியுள்ளனர்!
ஆன்மிகத்தால் முடியாதை மனித இனத்தின் அறிவியால் இந்த கொரோனாவை  கண்டுபிடித்து, கட்டுப்படுத்தி, குணமாக்கி  வருகின்றனர்.மருத்துவர்களின் பணி இதில் போற்றத்தக்கது.

பங்குச் சந்தை முதல் பரலோகத் தந்தை வரை,
மடங்கள் முதல் மால்கள் வரை ஆட்டம் காண வைத்துள்ளது இந்த கொரோனா!


கொரோனாவில் இருந்து தப்பிப்பது எப்படி?
https://www.health.harvard.edu/diseases-and-conditions/coronavirus-resource-center
1.குடும்பத்திலோ அல்லது அருகில் இருப்பவர்கள் யாரெனும் உடல் நிலை சரியில்லாமலிருந்தால் அவர்களிடமிருந்து விலகி இருக்க வேண்டும்

2.முழங்கைகள் வரை அடிக்கடி சோப்பு அல்லது சானிடைசரால் கழுவ வேண்டும்

3.வீட்டில் உள்ள பொருட்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

4. இருமல் வரும் போது கைக்குட்டை அல்லது டிஸ்சு பேப்பரை பயன்படுத்த வேண்டும்.

5. கைகளால் கண், மூக்கு, வாய் களை அடிக்கடி தொடுவதை தவிர்க்கவும்.

நோயற்ற வாழ்வே! குறைவற்ற செல்வம்!

- நாடற்றவன்







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக