6.2.20

பூவுடன் சேர்ந்து மணக்கப்போகும் நார்!


"பூவுடன் சேர்ந்து நாரும் மணக்கும்" என்ற ஒரு பழமொழி கிராமத்து வழக்கத்தில் இன்றளவும் தன்னை உயிர்பித்துக்கொண்டிருக்கிறது. ஆம், இந்த தலைப்பிற்கு பொருத்தமாக பொருந்தி போயிருப்பவர் திரு. பிரஷாந்த் கிஷோர் பாண்டே எனும் வட இந்தியர் 

பி.கே வின் முதல் அரசியல் உக்திப்பயணத்திற்கு வித்திட்டவர் இன்றைய இந்திய பிரதமர் திரு.நரேந்திரமோடி.

நிற்க!  புரிவதற்கு சற்று நிதானமாக படிக்கவும்.

பிகேவின் முதல் அரசியல் உத்தியோகம் தொடங்கியது நரேந்திர மோடிக்காக குஜராத்தில் 2012 ஆம் ஆண்டு வெற்றி பெற்றது தான். இதன் தொடர்ச்சியாக 2014 ல் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலிலும் இவரின் உக்திகள் வெற்றி பெற்றன என்று சொல்லப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து 2015 ல் பிஹார் முதல்வர் நித்திஷ்குமார் அவர்களுக்கும் வெற்றி பெற்றுக்கொடுத்தார். அந்த வெற்றியிலும் பிஹாரின் நித்திஷ்குமாரின் ஜேடியு மற்றும் பிஜேபி சேர்ந்து மஹாஹத்பந்தன் கூட்டணி சேர்த்து சட்டசபை தேர்தலில் வெற்றி கிட்டியது பிகே விற்கு.இதனைத் தொடர்ந்து 2017-ல் பஞ்சாபின் முதல்வர் அம்ரீந்தர் சிங்கிற்காக திட்டம் வகுத்துக் கொடுத்து வெற்றி பெற்றார்.

அதற்கடுத்ததாக ஆந்திர மாநில ஒஎஸ்ஆர்-காங்கிரஸ் கட்சியின் ஜெகன் மோகனுக்கு உக்தி அரசியல் கற்றுக்கொடுத்து வெற்றி பெற வைத்துள்ளார் என்று நம்புவோம்!


2019-ன் இறுதியில் நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டமன்றத்திலும் பிஜேபி-சிவசேனா வின் மாகா கூட்டணிக்கு வேலைபார்த்து வெற்றி பெற வைத்து அதன் நீட்சியாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிக்கு இன்னும் சில நாட்களில் நடைபெறவிருக்கும் டெல்லி சட்டமன்ற தேர்தலுக்கு ஆலோசகராக இருக்கிறார்.

இதே பிகே வின் இன்னொரு பகுதியையும் நாம் கட்டாயம் பார்ப்போம்.

1. பிகே வின் ராஜ தந்திரம்!
    ஆம் இவரின் தீர்க்கமான முடிவு எந்த ஒரு கட்சி வெற்றி பெறப்போகும் என்பதை தனது கருத்தாய்வு மற்றும் முன்னரே எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பு குழு கொடுக்கும் முடிவுகளின் அடிப்படையிலேயே அந்தந்த கட்சிகளுடன் தனது அசாத்திய அறிவெனும் திட்டமிட்ட சூழ்ச்சி வலையில் விழ வைத்துள்ளார் என்பது கீழ்கண்ட மாநிலங்களில் தெரிகிறது.
 1. நரேந்திர மோடி குஜராத்தின் 2007  முதல்வராக இருந்து 2012 சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் பொழுது தான் பிகே இவருடன் சேர்ந்து வெற்றி பெற்றிருக்கிறார். (2) இதன் தொடர்ச்சியாக தான் பஞ்சாப்பின் புகழ்பெற்ற அம்ரீந்தர் சிங்குடன் சேர்ந்து பஞ்சாபில் இவரின் சாமர்த்தியத்தை கைப்பற்றி நிரூபித்துள்ளார். (3) பிஹாரின் நித்திஷ்குமாரின் தேர்தலிலும் இதே நிலை தான் ஏற்பட்டது. (4) அதைப்போன்று தான் இவர் ஆந்திராவின் ஜெகன் மோகனுக்கும், (5) டெல்லியில் தற்பொழுது முதல்வராக இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி சந்திக்கும் சட்டமன்ற தேர்தலுக்கும் இந்த அசாத்திய சாணக்கியனின் உக்தி அரசியல் உடன் சேர்ந்திருக்கிறது. இதன் வழியில் தான் தற்பொழுது அவர் தென்னகத்தில் ரஜினி,கமல், அதிமுக இருக்க மக்களின் பேராதரவிலும், தீவிர களப்பணியாற்றும் திராவிட இயக்கத் தீரர்கள் ஆதரிக்கும் திமுக வை தேர்ந்தெடுத்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். இது 2021 ல்லும் பிரதிபலிக்கும்.

2.பிகே வின் தோல்வியும், விமர்சனங்களும்!
    இவரின் மந்திரத் தவறு ( மேஜிக்கல் பால்டர்ஸ் ) அரங்கேறியது உபி யில் தான். இவரின் உக்திகள் உத்திரகான்டிலும், உபி யிலும் காங்கிரசை புரட்டிப்போட்டது. அதிலும் குறிப்பாக உபி யில் 105 தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வெறும் 7 தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. இப்ப எங்கே சென்றது இவரின் பொலிடிக்கல் ஸ்டேடர்ஜி?
https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/elections-results-highlights-when-prashant-kishor-was-of-little-help-to-congress/articleshow/57599728.cms?from=mdr


மகாராஷ்டிர மாநிலத்திலும் சிவசேனாக்களும் எங்களின் வெற்றி எங்களது தொண்டர்களின் கடின உழைப்பே என்றும் அதன் முக்கிய மூத்த நிர்வாகிகளின் கருத்தாக இருக்கிறது.
https://mumbaimirror.indiatimes.com/maharashtra-assembly-elections/news/critics-question-prashant-kishors-role-in-sena-results/articleshow/71748782.cms

மேற்குவங்கத்தில் சமீபத்தில்  திரினாமுல் கட்சி பெற்ற வெற்றிக்கும் மத்திய அரசின் என்ஆர்சி க்கு எதிராக மம்தா பேனர்ஜியின் சீறிப்பாய்ந்த எதிர்ப்பும் அதனைத் தொடர்ந்து முன்னெடுத்த பிரச்சாரமும் தான் முன்னிலையில் இருக்கிறது என்று தான் தரவுகள் எடுத்துரைக்கிறது.
https://www.cnbctv18.com/politics/west-bengal-byelection-result-2019-nrc-prashant-kishore-swung-bypolls-in-trinamools-favour-4786651.htm

இறுதியாக இவரைப்பற்றிய வந்த கருத்துகள்!
பிராசாந்த் கிஷோர் ஒரு நல்ல விற்பனையாளராக வேண்டுமென்றால் ஒரு திடகார்த்தமான பொருளை தயாரிக்க வேண்டும் என்பது தான்.
இவர் பெற்ற வெற்றிகள் அனைத்தும் வெற்றிபெறுபவர்களின் அருகில் இருப்பதனாலே மட்டுமே மற்றபடி இவரது உக்தி மந்திரத் தவறுகளாகும்.
https://theprint.in/opinion/prashant-kishor-election-magician-but-wins-only-when-in-winning-team/358974/

நான் ஏன் இந்த தலைப்பை வைத்தேன்?
பூவோடு சேர்ந்து "நாரும்" மணக்கும்- இதில் "பூ" என்பது இந்த தமிழ்ச் சமூகம் அறிவார்ந்து சமத்துவத்துடன் சமூக நீதி பெற்றுத்தந்த நீதிகட்சித் தொடங்கி பெரியார்,அண்ணா, கலைஞர் வழியில் ஒரு சிந்தாந்த கொள்கையை நிலைநாட்டிட எவ்வித பலனையும் எதிர்பார்க்காமல் களத்தில் நிற்கும் தோழர்களையும், உடன்பிறப்புகளையும், தொண்டர்களையும் மற்றும் ஏகோபித்த ஆதரவளிக்கும் தமிழக மக்களையும் தான். அப்ப "நார்" யாருன்னு கேட்கிறீங்களா?
வேற யாருங்க நம்ம பிரசாந்த் கிஷோர் (பிகே) பாண்டே தான்..

 எச்சரிக்கை!
பிகே வின் குழு நியமனம் செய்யப்போகும் 14 குழுக்கள் எடுக்கப்போகும் தரவுகள் அனைத்தும் நாளைய பொழுது இந்த சிந்தாந்தை சிதைப்பதற்கும், தேசிய கட்சிக்கு எதிராக வரிந்து கட்டி நிற்கும் திமுக போன்ற மாநில கட்சியை உடைப்பதற்கும் உதவும் என்பதை திடமாக சொல்ல முடியும். ஏனென்றால் இவர் ஒரு ஒப்பந்தக்காரர் தான் நாளை ரஜினிக்காகவோ அல்லது தமிழக பாஜக-வுக்காகவோ ஒப்பந்தம் செய்யப்பட்டால் இந்த 14 குழுக்களின் தரவுகளை பயன்படுத்துவார் என்பதில் எமக்கு துளியும் சந்தேகமில்லை.








5.2.20

சமத்துவம் பேசும் நாடோடிகள்!

                                         

நாடோடிகள்-1 ன் தாக்கம் இதில் மேலும் இருக்கும் என்று நினைத்து படத்திற்கு சென்றேன் ஆனால் படம் எதிர்பார்த்ததை விட சற்று தூக்கலாகவே சமூக சமத்துவத்தை தூக்கிப் பிடித்திருக்கிறது.

மனித சமத்துவத்தை இந்த இந்திய நாட்டில் புகுத்துவதற்கு தன் காலங்கள் முழுவதும் சமரசமின்றி போராடிய அம்பேத்கரியம், பெரியாரிசம், மார்க்சியம் , காமராஜர், திருப்பூர் குமரன், வேலுநாச்சியார், தீரன், போன்றவர்களை முன்னிறுத்தி முன்பாதிகள் நகர்த்தியிருக்கின்றன.

முன்பாதியில் கிராமத்திற்கு தேவையான தேவைகளை முன்னிறுத்தி போராட்டம், கூட்டங்கள் ஆகிய இவைகளை ஒரு குழுவாக களத்தில் முன்னெடுப்பவர்கிறார்கள். கதாநாயகன் ஜீவாவிற்கு அவரது மாமன் வீட்டில் உள்ள மூன்று பெண்களையும் தரமறுக்கிறார்கள் அதன் பின் அவரது உறவுமுறையிலேயே பெண்கொடுக்கிறார்கள். திருமணம் முடிந்து முதலிரவிற்கு செல்லும் கதாநாயகனுக்கு பெரும் அதிர்ச்சி அளித்தது. ஏனென்றால் அப்பெண் ஏற்கனவே வேறொருவரை காதலித்ததாகவும், அவரை அவளின் குடும்பத்தினர் கடத்தி வைத்து சித்திரவதை செய்து திருமணத்திற்கு சம்மதிக்க வைத்ததாகவும் சொல்லி தன் கையினை பிளேடால் அறுத்துக்கொள்கிறார். முற்போக்கான கதாநாயகன் அன்றிரவே அவளின் காதலனை நேரில் சந்தித்து பேசிகிறார் அந்த நிமிடமே விருப்பமில்லாமல் நடைபெற்ற திருமணத்தை முறித்து அதிலும் தான் கட்டிய தாலியை தானே மூன்று முடிச்சினையும் அவிழ்த்து அப்பெண்ணின் காதலனின் கையில் ஒப்படத்தை அவணை அவளுக்கு கட்டச்சொல்லி பாதுகாப்பாக வெளியூருக்கு அனுப்பி வைக்கிறார். இதனை அறிந்த பெண்ணின் குடும்பத்தினர் கதாநாயகனையும் அவரது நண்பர்களை நயப்புடைகின்றனர் அதன் பிறகு அவர்கள் சேர்ந்து வாழ்ந்தார்களா அல்லது ஜாதிய திமிருடன் உள்ள அப்பெண்ணின் உறவினர்கள் அவளை மீட்டார்களா? என விருப்ப்புடன் நகருகிறது. பின்பாதியில் முன்பாதியின் கருத்தை இருவேறு சமூக பிரிவைச் சேர்ந்த காதலர்கள் சேருவதற்கு தடையாக இருக்கும் ஜாதிய வன்மத்தின் கூர்களை அந்த பெண்ணின் தாய் தந்தையர்கள் அன்பில் உடைத்தெறிகின்றனர்.
பெண்ணின் சமூகம் பெரும்பான்மையினர்,நாங்கள் ரெண்டு கோடி பேர் இருக்கிறோம் என்று சொல்லும் போது கதாநாயகன் , அந்த ரெண்டு கோடி பேரில் வேலையில்லாத இளைஞர்கள் எத்தனை பேர்? வருமையில் இருப்பவர்கள் எத்தனை பேர் ?
என கேட்கும் கேள்வி திரையரங்கில் இருப்பவர்களே சிந்திக்க வைக்கிறது.

படத்தில் நடப்பு நிகழ்வுகளை மிக தைரியமாக சுட்டிக்காட்டியிருக்கும் இயக்குனருக்கு வாழ்த்துகள் குறிப்பாக உடுமலைப் பேட்டை கவுசல்யா சங்கர், திருநங்கையர்களை சகமனிதர்களாக பார்ப்பது, பெரியார் சிலையினை உடைக்கபடுவது, திருச்சியில் கற்பினி பெண்ணை போக்குவரத்து காவலர் எட்டி உதைத்தது, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, சமூக அக்கறை ( கோமாளிகளை தொடர்ந்து பேட்டி எடுப்பது ) என சாடியிருக்கிறார்கள்.

இறுதிக்காட்சியில் ஜாதியற்றவர்கள் மாநாட்டில் காதல் திருமணம் செய்பவர்களுக்கு பாதுகாப்பு, ஜாதிமறுப்பு காதல் திருமணம் செய்தவர்களுக்கு இடஒதுக்கீடு உள்ள தீர்மானங்கள் நிறைவேற்றபட்டு ஒரு நல்ல முன்னெடுப்புடன் படம் முடிகிறது.

புரட்சி என்று தொடங்கும் பாடல்கள் பார்ப்பவர்களின் உணர்ச்சியை தூண்டுகிறது.இயக்குனரின் தையரியமான கதை,திரைக்கதை மற்றும் இயக்கம். சிறப்பான பின்னனி இசைக்கோர்ப்பு மற்றும் கதாபாத்திர தேர்வு என முக்கியத்துவத்துடன் செயல்பட்டிருக்கிறார்.


நடிகர்கள் - எம் சசிக்குமார் , பரணி, நமோ நாராயணா, நடிகைகள் - அஞ்சலி, அதுல்யா ரவி
இசை : ஜஸ்டின் பிராபகர்
இயக்குனர் : சமுத்திரக்கனி