5.2.20

சமத்துவம் பேசும் நாடோடிகள்!

                                         

நாடோடிகள்-1 ன் தாக்கம் இதில் மேலும் இருக்கும் என்று நினைத்து படத்திற்கு சென்றேன் ஆனால் படம் எதிர்பார்த்ததை விட சற்று தூக்கலாகவே சமூக சமத்துவத்தை தூக்கிப் பிடித்திருக்கிறது.

மனித சமத்துவத்தை இந்த இந்திய நாட்டில் புகுத்துவதற்கு தன் காலங்கள் முழுவதும் சமரசமின்றி போராடிய அம்பேத்கரியம், பெரியாரிசம், மார்க்சியம் , காமராஜர், திருப்பூர் குமரன், வேலுநாச்சியார், தீரன், போன்றவர்களை முன்னிறுத்தி முன்பாதிகள் நகர்த்தியிருக்கின்றன.

முன்பாதியில் கிராமத்திற்கு தேவையான தேவைகளை முன்னிறுத்தி போராட்டம், கூட்டங்கள் ஆகிய இவைகளை ஒரு குழுவாக களத்தில் முன்னெடுப்பவர்கிறார்கள். கதாநாயகன் ஜீவாவிற்கு அவரது மாமன் வீட்டில் உள்ள மூன்று பெண்களையும் தரமறுக்கிறார்கள் அதன் பின் அவரது உறவுமுறையிலேயே பெண்கொடுக்கிறார்கள். திருமணம் முடிந்து முதலிரவிற்கு செல்லும் கதாநாயகனுக்கு பெரும் அதிர்ச்சி அளித்தது. ஏனென்றால் அப்பெண் ஏற்கனவே வேறொருவரை காதலித்ததாகவும், அவரை அவளின் குடும்பத்தினர் கடத்தி வைத்து சித்திரவதை செய்து திருமணத்திற்கு சம்மதிக்க வைத்ததாகவும் சொல்லி தன் கையினை பிளேடால் அறுத்துக்கொள்கிறார். முற்போக்கான கதாநாயகன் அன்றிரவே அவளின் காதலனை நேரில் சந்தித்து பேசிகிறார் அந்த நிமிடமே விருப்பமில்லாமல் நடைபெற்ற திருமணத்தை முறித்து அதிலும் தான் கட்டிய தாலியை தானே மூன்று முடிச்சினையும் அவிழ்த்து அப்பெண்ணின் காதலனின் கையில் ஒப்படத்தை அவணை அவளுக்கு கட்டச்சொல்லி பாதுகாப்பாக வெளியூருக்கு அனுப்பி வைக்கிறார். இதனை அறிந்த பெண்ணின் குடும்பத்தினர் கதாநாயகனையும் அவரது நண்பர்களை நயப்புடைகின்றனர் அதன் பிறகு அவர்கள் சேர்ந்து வாழ்ந்தார்களா அல்லது ஜாதிய திமிருடன் உள்ள அப்பெண்ணின் உறவினர்கள் அவளை மீட்டார்களா? என விருப்ப்புடன் நகருகிறது. பின்பாதியில் முன்பாதியின் கருத்தை இருவேறு சமூக பிரிவைச் சேர்ந்த காதலர்கள் சேருவதற்கு தடையாக இருக்கும் ஜாதிய வன்மத்தின் கூர்களை அந்த பெண்ணின் தாய் தந்தையர்கள் அன்பில் உடைத்தெறிகின்றனர்.
பெண்ணின் சமூகம் பெரும்பான்மையினர்,நாங்கள் ரெண்டு கோடி பேர் இருக்கிறோம் என்று சொல்லும் போது கதாநாயகன் , அந்த ரெண்டு கோடி பேரில் வேலையில்லாத இளைஞர்கள் எத்தனை பேர்? வருமையில் இருப்பவர்கள் எத்தனை பேர் ?
என கேட்கும் கேள்வி திரையரங்கில் இருப்பவர்களே சிந்திக்க வைக்கிறது.

படத்தில் நடப்பு நிகழ்வுகளை மிக தைரியமாக சுட்டிக்காட்டியிருக்கும் இயக்குனருக்கு வாழ்த்துகள் குறிப்பாக உடுமலைப் பேட்டை கவுசல்யா சங்கர், திருநங்கையர்களை சகமனிதர்களாக பார்ப்பது, பெரியார் சிலையினை உடைக்கபடுவது, திருச்சியில் கற்பினி பெண்ணை போக்குவரத்து காவலர் எட்டி உதைத்தது, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, சமூக அக்கறை ( கோமாளிகளை தொடர்ந்து பேட்டி எடுப்பது ) என சாடியிருக்கிறார்கள்.

இறுதிக்காட்சியில் ஜாதியற்றவர்கள் மாநாட்டில் காதல் திருமணம் செய்பவர்களுக்கு பாதுகாப்பு, ஜாதிமறுப்பு காதல் திருமணம் செய்தவர்களுக்கு இடஒதுக்கீடு உள்ள தீர்மானங்கள் நிறைவேற்றபட்டு ஒரு நல்ல முன்னெடுப்புடன் படம் முடிகிறது.

புரட்சி என்று தொடங்கும் பாடல்கள் பார்ப்பவர்களின் உணர்ச்சியை தூண்டுகிறது.இயக்குனரின் தையரியமான கதை,திரைக்கதை மற்றும் இயக்கம். சிறப்பான பின்னனி இசைக்கோர்ப்பு மற்றும் கதாபாத்திர தேர்வு என முக்கியத்துவத்துடன் செயல்பட்டிருக்கிறார்.


நடிகர்கள் - எம் சசிக்குமார் , பரணி, நமோ நாராயணா, நடிகைகள் - அஞ்சலி, அதுல்யா ரவி
இசை : ஜஸ்டின் பிராபகர்
இயக்குனர் : சமுத்திரக்கனி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக