15.1.20

அம்மணமாகிப்போன ஆசான்கள்!

எழுதுவதற்கே சற்று தலை சுற்றுகிறது இருந்தாலும் சிறிது நீர்பருகிய பின்  சற்று இளைப்பாரிவிட்டு பிறகு எழுதுகிறேன். ஏனென்றால் காலை முதல் தொடங்கிய மண்டசூடு துக்ளக் "அறிவாளி"களின் உரையாடலுக்குப்பிறகு உச்சத்திற்கு சென்று உச்சநட்சத்திரம் கக்கிய நஞ்சினை முறிக்கவே இந்த முடிவு தான் இந்த "நிர்வாணமாகிப்போன" காவி தர்பார்.
இந்துக்களை காக்கும் "விஜயபாரதத்தின்" தைப்பொங்கல் பாசம்-1
பதிவேற்றியுள்ள படத்தின் வரிகளை கவனமாகப் படிக்கவும் சரி ரொம்ப செரமப்பட வேணாம் நானே எழுதுறேன்.
"பகுத்தறிவாதிகள் பொங்கலை தமிழர்திருநாள்" என்று அழைக்கின்றனர். எங்காவது பொங்கல் பண்டிகையை தமிழ் பேசும் முஸ்லீம்களோ, தமிழ் பேசும் கிறிஸ்துவர்களோ கொண்டாடுகின்றார்களா? இல்லையே பொங்கல் பண்டிகையை தமிழர் திருநாள் என்று அழைத்தாலும் கொண்டாடுவது என்னவோ ஹிந்துக்கள் மட்டும் தான் என்று முடிக்கிறது, இந்த முடைநாற்றும் வீசும்  விஜயபாரதம்..அதற்கு ஆதார மறுப்பினை கீழே பாருங்கள்....↓
கீழக்கரை சதக் முஹமது கல்லூரியில் கொண்டாடிய சமத்துவப்பொங்கல் ( இந்து,முஸ்லீம் இணைந்து) படம்
இதைவிட சமத்துவப்பொங்கல் என்று சொல்வதற்கு வேறென்ன வேண்டும்!..
உங்களால் "தமிழர்திருநாள்" தைப்பொங்கல், சமத்துவப்பொங்கல் என்று கொண்டாட முடியாமல் எரிவதாலே! இவ்வாறு கந்தகம் போன்று கொப்பளிக்கிறீர்கள் ஏன் இது போன்று ஏதாவது ஒரு பார்ப்பனர்களுக்கு கொண்டாட மனமிருக்கிறதா?
உங்களுக்கு இருக்காது; ஏனென்றால் இவர்கள் தான் கிரேடு அன்ட் ஈக்குவாலிட்டியை உருவாக்கியவர்களாயிற்றே! அவர்களால் எவ்வாறு செய்ய இயலும்! மாறாக இவர்கள் ஏசுவதையும், இப்பண்பாட்டினை சிதைத்து அவர்களின் வழிகளை பின்பற்றவதற்காகவே முயற்சிக்கிறார்கள்.

அடுத்த ஒருவரின் தமிழ்பாச பொங்கல் வாழ்த்தினை பார்ப்போம்!...↓
இவரைப்பற்றி நான் என்ன சொல்லித்தெரிய...நாய்க்கு கூடத் தெரியும் போட்டியாளர் தனக்கு போட்டி யாரென்று. இவருக்குத் தெரிந்ததெல்லாம் #ஹிந்து நாட் ஏ இந்து மட்டும் தான்.


கருப்பைக்கண்டால் கதறும் காவி!
இவரின் நிறமோ கருப்பு, நடித்த படத்தின் தலைப்போ கருப்பு
( காலா) , சமீப காலங்களில் உடுத்தும் உடையோ கருப்போ ஆனால் இந்த கருப்புச் சட்டைக்கு தடை விதித்தது குறித்து கேட்பதற்கு துப்பில்லா தூய்மையானவர், குட்டிக் கதை சொல்லி குழம்ப வைக்கும் நேர்மையானவர்.

எழுவர் விடுதலைப்பற்றி கேட்டால் யாரென்று கேட்பார்?
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து கேட்டால் பதில்வராது?
சிஏஏ பற்றி பேசமாட்டார்?
370 குறித்து பேசமாட்டார்?
மீறி ஏதாவது கேட்டால் நான் இன்னும் கட்சி தொடங்கவில்லை, தொடங்கியபிறகு பதில் சொல்கிறேன் என்பார்!
வேறென்ன என்னதான் பேசுவார்?
வடிவேலுவின் பாணியில் நீ புடுங்குவது எல்லாமே தேவையில்லாத ஆணி!
பாரதப்பிரதமர் கரிஷ்மா உள்ளவர்,
தேசத்தை பாதுகாக்க வந்தவர்கள்...,
பணமதிப்பிழப்பு திட்டம் என்பது பென்டாஸ்டிக்,
என்பது போன்ற பிதற்றலின் தொடர்ச்சியே... இன்றை துக்ளக் 50 ஆவது ஆண்டு விழாவில் தான் என்ன நோக்கமுடையவன் என்றும், அரவம் தன் சட்டையினை கழற்றுவது போல் தன்னுடைய அரிதாரத்தை அழித்து தான் ஒரு "இந்துத்துவ பழம்" என்பது கொட்டை வெடித்து முத்திய கனியைப் போல ஒழுகி ஓடியிருக்கிறார். அதில் ஒன்றும் தவறில்லை ஆனால் உனக்கென்னப்பா நீ பைத்தியம், நீ என்னவெல்லாம் பேசலாம் என்று புரிதல் உள்ள மீம்ஸ் கிரியேட்டார்ஸ் போல உளயிருக்கிறார். அதனைப்படித்த போது தான் இதனைக் கட்டாயம் எழுதவேண்டும் என்று உணர்ச்சிப் பெருக்கெடுத்து ஓடியது... எமக்கு↓

துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி என்பார்களாம்!
படத்திற்கு படம் பஞ்ச் வசனம் பேசி எம் வயதொத்த இளைஞர்களையும், என்னைவிட மூத்த சர்க்கரை நோயால் பாதிப்புக்குள்ளான பல பேரை இதோ வருகிறேன், வந்துட்டேன், போருக்கு ஆய்த்தமாவோம் , போர் தொடங்கியது என்று புரளிகளையை பொளப்பாய் வைத்திருக்கும்  நீரும் உம் குடும்பமும் அறிவாளிதான்!
இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்று சொல்லும் பொதுவாழ்வில் தங்களை முழுமையாக அர்ப்பணித்து அரசியல் வாதிகளுக்கு மத்தியல் 70 வயதிலும் அரசியல் செய்துகொண்டிருக்கும் நீர் அறிவாளிதான்!
மாநகராட்சிக் கட்டிதத்திற்கு தன் மனைவி வைத்த வாடகைப் பற்றி வாய்திறக்காத நீர் அறிவாளி தான்.

 வரலாற்றை பாதுகாப்போம்!
1971ல் ஶ்ரீராமச்சந்திரமூர்த்தியின் சிலையில் செருப்பு மாலை அணித்து பெரியார் ஊர்வலம் நடத்தினார்.அது பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது இதனால் கலைஞர் பெரிதும் பயந்தார் என்று தன்னுடைய இந்துவ அடிமை எனும் ரோமத்தினை உதிர்த்திருக்கிறார்.
வரலாற்றை மாற்றிய ஹிட்லரின் நிலையம் என்ன?
1971ல் சேலத்தில் தந்தை பெரியாரின் ஊர்வலத்தில் தோழர்களுடன் வண்டியில் அமர்ந்து பயணித்துக்கொண்டிருந்தார் பெரியார் அவர்கள். பெரியாரின் கூட்டத்திற்கு எதிர்ப்பு காட்ட வேண்டும் என்று அரசிடம் ஜனசங்கத்தால் ( இன்றைய பிஜேபி) அனுமதிகேட்கப்பட்டது. அவர்களுக்கும் அனுமதி கொடுக்கப்பட்டது. யாரால் பெரியாரின் கொள்கை வழியில் வந்த கலைஞரி கருணாநிதி அவர்களின் அரசினால்.அப்போது திட்டமிட்டு இந்துத்துவ கும்பலைச் சேர்ந்தவன் பெரியாரை நோக்கி வீசிய செருப்பு தோழர்களின் கையில் அம்புட்டது.

அடுத்த நொடியே எங்கள் பெரியாரை நோக்கியா வீசுகிறீர்கள் என்று சொன்ன தோழர்கள் அதே செருப்பினை எடுத்து ராமன் படத்தினை அடித்தார்கள். அதை இன்றைக்கு நீங்கள் பேசியதைப்போல் அன்றைக்கு ஒரு கும்பல் தமிழகம் முழுவதும் இராமனை செருப்பால் அடித்த பெரியார் ஆதரிக்கும் திமுக வின் வேட்பாளருக்கா உங்கள் ஓட்டு? என்று தமிழகம் முழுவதும் சுவரொட்டி அடித்து ஒட்டியது.
விளைவு இது வரை தமிழக அரசியலில் யாரும் பெற்றிடாத   184 சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது என்பதை திட்டமிட்டு மறைத்து பூசிமொழிகியிருக்கிறார்.

தான் யார் என்பதை வெளிப்படுத்தி நேரடி அரசியல் களத்திற்கு வந்து மீண்டும் ஒரு பண்பாட்டு படையெடுப்பிற்கு வித்திட்டுள்ளார் ஒரு பைசா செல்வில்லா 100 கோடி சம்பாரிக்கும்..சூப்பர்ஸ்டார்!



2.1.20

சமூகநீதி கப்பலில் பயணிக்கும் திமுக!


வரலாறுகள் அவ்வப்போது நமக்கு நினைவுபடுத்திக்கொண்டே இருக்கும். அப்படி ஓர் வரலாறு திரும்பிய நாள் தான் இன்று!
முன்னோடிகள்!
இவ்வரலாறு என்பது சாதாரண ஒன்றாக அமையவில்லை. மாறாக இதனை அமைக்க அரும்பாடு பட்டது முன்னோடிகளான தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும், முத்தமிழ் அறிஞர் கலைஞரும், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணியும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களும் கடந்த வந்த பாதையில் பயணித்துக் கொண்டிருக்கும் திமுக வின் தலைவர் தளபதி ஸ்டாலின் அவர்கள், தனது லட்சியப்பயணத்தில் மேலும் ஒரு மைல் கல்லை கடந்திருக்கிறார். ஆம் அந்த மைல் கல் தான் எவரை அரவாணிகள் என்று இந்த சமூகம் ஒதுக்கிய போதும் அவர்களை தந்தை பெரியாரின் சமத்துவப் பார்வையில்,
"ஒரு நாடு மற்றொரு நாட்டினை ஒடுக்குமேயானால் அந்த ஒடுக்கப்படும் நாட்டின் பக்கம் நிற்பேன்!
ஒரு இனம் இன்னொரு இனத்தினை ஒடுக்குமேயானால் அந்த ஒடுக்கப்படும் இனத்தின் விடுதலைக்காக நிற்பேன்!
ஒரு மொழி இன்னொரு மொழியை ஒடுக்குமேயானால் அந்த ஒடுக்கப்படும் மொழியின் பக்கம் நிற்பேன்!
ஒரு ஆண் ஒரு பெண்ணை ஒடுக்க நிணைத்தால் அந்த ஒடுக்கப்படும் பெண்ணின் விடுதலைக்காக நிற்பேன்"
என்று உரக்கச்சொன்ன பெரியார் அதோடு மட்டும் நிற்கவில்லை பெண்களுக்குச் சொத்துரிமை பற்றி பிரச்சினை வந்தபோது, அப்படிப் பெண்களுக்குச் சொத்துரிமை கொடுக்கப்பட்டால் இஷ்டப்பட்டவாளுடன் பெண்கள் ஓடிவிடுவார்கள் என்றவர் "காஞ்சி சங்கராச் சாரியார் சந்திரசேகரேந்திர சரசுவதி" ஓடிய 

சுதந்திரத்திற்கு முன்பே!

அதேநேரத்தில், 1929 ஆம் ஆண்டிலேயே பெண்களுக்குச் சொத்துரிமை தேவை என்று செங்கற்பட்டு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றச் செய்தவர் தந்தை பெரியார். 26.1937 க்கு முன் பெண்கள் சொத்தே வைத்து இருக்க கூடாது.1937 க்கு பிறகு வெள்ளைக்காரர்களால் தான் பெண்கள் சொத்து வைத்து இருக்கலாம் என்று சட்டம் வந்தது. இதன்படி சீதன சொத்து அல்லது சொந்தமாக வாங்கி வைத்து கொள்ளலாம் ஆனால் வாரிசுரிமைப்படி சொத்தில் பங்கு கிடையாது.
1956-ல் பெண்களுக்கு வாரிசுரிமை உண்டு ஆனால் அது தனிசொத்துக்கு மட்டுமே, பூர்வீக சொத்தில் வாரிசுரிமை கிடையாது என்று இருந்து வந்த சூழலில்,
திராவிட இயக்க ஆட்சியில்! 
1989 ல் அப்போதைய தமிழகத்தின் முதல்வராக இருந்த டாக்டர் கலைஞர் அவர்கள் பெரியார், அண்ணா அவர்கள் போட்டுத்தந்த தத்துவப் பாதையில், பெண்களுக்கு பூர்வீக சொத்தில் வாரிசுரிமை உண்டு என்று சட்டம் இயற்றினார்.

இந்தியா முழுமைக்கும்!
திமு கழகத்தின் தலைவரும், முதல்வருமான கலைஞர் கருணாநிதி அவர்கள் சட்டம் இயற்றி 15 வருஷம் கழித்து திமுக கூட்டணி வகித்த காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசால் 2005 ல் இந்தியா முழுவதும், பெண்களுக்கு பூர்வீக சொத்தில் பங்கு பெறும் வாரிசுரிமையை சட்டமாக அமுல்படுத்தபடுத்தியது. இப்படியே பாலின சமூகநீதியில் இந்தியாவிற்கே முன்னோடியாக விளங்கிய தமிழகத்தில் தான் பல காலமாக அலி, அரவாணி போன்ற சொற்களால் கேலியுடன் அழைக்கப்பட்டு சமூகத்தில் ஆண்களாகவோ அல்லது பெண்களாகவோ விருப்பம் போல் வாழ முடியாமலும், பெற்றோர்களால் புறக்கணிக்கப்பட்டு  மன உளைச்சலுடன் சமூகத்தில் அங்கீகாரம் எதுவுமின்றி ஒடுக்கப்பட்ட சமுதாயமாக எந்தத் தொழிலும் செய்ய முடியாமல் கேளிக்கை நடனம் மற்றும் பாலியல் தொழிலில்  வீழ்த்தப்பட்டு  வாழ்க்கையின் அர்த்தம் தெரியாமல் அவலத்தில் வாழ்ந்து வந்தவர்களுக்கு சமூகத்தில் ஒரு அங்கீகாரம் கிடைத்திட வழிசெய்யும் வகையில் ஏப்ரல் 15 - 2008 அன்றைய முதல்வராக இருந்த கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் திருநங்கையர்களை பாதுக்காத்திடும் வகையில் தமிழக அரசால் திருநங்கையர்களுக்கென தனி நலவாரியத்தினை அறிவித்திட்டார். மேலும் அந்நாளினை ஒவ்வொரு ஆண்டும் திருநங்கையர் தினமாக கொண்டாட மார்ச் 11 20011 அரசானையும் பிறப்பிக்கப்பட்டது. இவ்வாறு இருந்த வந்த நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு திருநங்கையர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து அரசாணை சேர்த்துள்ளது. இவ்வாறு இருக்கு நெடிய சமூக நீதிப்பயணத்தில் கடந்த  2019 பிப்ரவரி மாதம் 23 ஆம் தேதி தஞ்சையில்   நடைபெற்ற திராவிடர் கழக மாநில மாநாட்டில் திராவிடக் கொள்கை விளக்க அறிக்கை (Dravidian Manifesto) ஒன்றினை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கையொப்பத்துடன் வெளியிட்டார். அதில் 33 அம்சங்களைக் கொண்ட அந்த அறிக்கை கையேடுதான்  இரு நாள் மாநாடுகளின் கதாநாயகன் என்று சொல்லவேண்டும். மாநாட்டில் பங்கேற்ற பல்வேறு கட்சிகளின் தலைவர் கள் அந்த அறிக்கையைப் பெரிதும் பாராட்டினர். காலத் தால் வெளியிடப்பட்ட ஆவணம் - கருவூலம் என்று ஒருமனதாக அனைவரும் பாராட்டினர். அந்த அறிக்கையின் 12 வது வரிசையில் "ஓரினச் சேர்க்கையாளர்கள், திருநங்கைகள், மாற்றுத் திறனாளிகள்  எல்லா வகைகளிலும் மற்றவர்களுக்குச் சமமானவர்களே என்ற அடிப்படையில் அனைத்து உரிமைகளின்  நுகர்வுக்கும் உரியவர்களே!" என்று சுட்டிக்காட்டியிருந்தன. இவ்வாறு தந்தை பெரியாரின் மறைவுக்குப்பிறகும் அவரது கொள்கையினை தொடர்ந்து முன்னெடுத்து வரும் திராவிட இயக்கங்களும், அதன்வழி வந்த அரசியல் கட்சியான திராவிட முன்னேற்ற கழகத்தின் தற்போதைய தலைவர் தளபதி முக ஸ்டாலின் அவர்கள் தமிழகத்தின் ஊரக உள்ளாட்சிகளுக்கான முதல் கட்ட தேர்தலில் மிகத் துணிச்சலாக மக்கள் நம் பக்கம் என்பதை நீரூபிக்கும் பொருட்டு நாமக்கல் மாவட்டம்,திருச்செங்கோடு ஒன்றியத்தின், ஊராட்சி ஒன்றியத்தை உள்ளடக்கிய கருவேப்பம்பட்டி ஊராட்சியில் 5000 பேர் வாக்களர்களை கொண்ட 2-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு, திமுக சார்பில் வேட்பாளராக திருநங்கை ரியா அவர்களை மனதார அறிவித்தார். அதோடு நின்று விடாமல் அவரது வெற்றிக்காக அப்பகுதியில் உள்ள திமு கழகத்தின் பொறுப்பாளர்கள் மற்றும் உடன்பிறப்புகள் உட்பட சுழன்றடித்து பிரச்சாரம் செய்தனர். நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை 02.01.2020 இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சுமார் 11 மணியளவில் ஒரு வரலாற்று செய்தி முன்னனி தொலைகாட்சிகளிலும், சமூக வலைதளங்களிலும் மின்னல் வேகத்தில் நவீன வார்த்தகளில் சொல்லுவேமேயானால் "வைரல்" ஆகிக்கொண்டிருந்தது. அந்த வைரலான செய்திதான்  இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி  முதல்  திருநங்கையான  ரியா அவர்கள் ஒன்று, இரண்டல்ல 950 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
இப்பேர்பட்ட ஒரு பாலின சமத்துவ சமூகப்புரட்சியினை திருநங்கையர்கள் மட்டுமல்ல ஏனையவர்கள் பாராட்டிப் போற்ற வேண்டியது தந்தை பெரியார் வழியில் பயணித்த பேரறிஞர் அண்ணா அவர்களின் மறைவிற்கு அய்யாவின் ஆலோசனைப்படி முதல்வராகி அவரது கொள்கைக்கு சட்ட வடிவம் கொடுத்த மானமிகு சுயமரியாதைக்காரன் என்று திராவிடர் கழகத்தாரால் வாஞ்சையுடன் அழைக்கப்படும் கலைஞர் மு.கருணாநிதி அவர்களுக்கும், நாளொரு மேனியும், பொழுதொருவண்ணம் பெரியாரின் கொள்கைகளை நினைவூட்டிப் பரப்பிக்கொண்டிருக்கும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கும்..பாஜக பாசிச ஆட்சிக்கு முட்டுக்கொடுத்துக் கொண்டு மாநில உரிமைகளை காவு கொடுத்துக்கொண்டிருக்கி இவ்வேளையில் அதனை மீட்டெடுக்கும் தலையாய பணியில் உழைப்பு உழைப்பு உழைப்பு என்று எதிர்கட்சியாக மட்டுமல்லாமல், ஆபத்தில் இருக்கும் மக்களை காப்பதில் உண்மையான ஆளும் கட்சியாக திகழ்ந்து கொண்டிருக்கும் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், திராவிட இயக்கத்தின் தற்போதைய தளபதி மானமிகு, மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் தான். 
ஆதாரத் தரவுகள்:

1.1.20

கைங்கரிய" புத்தாண்டு!

தலைப்பைப் பார்த்தவுடன் சற்று ஆன்மிகம் சம்பந்தமுடையது என்று மனமகிழ்ச்சியடைவீர்களானால் அது நீங்கள் மிகவும் ஏமாளி மணமுடையவர்கள் என்று தான் பொருள் கொள்ளவேண்டும்.
நீங்கள் நினைக்கும் கைங்கர்யத்திற்கும் நான் இங்கு எழுதும் கைங்கர்யம் துளியும் தொடர்பில்லாது என்றால் அது மிகையாகாது.
ஆம்,  நான் இந்த "கைங்கர்ய" த்திற்கு தலைப்பிட்டதற்கு காரணம் பார்னீயத்தின் மூலமாக பார்ப்பனர்களை தோலுரிப்பதற்காகவே.
உலகெங்கும் உள்ள அனைவரும் ஆசை ஆசையாக நேற்றிரவு முதல் பெரும் மகிழ்ச்சியுடன் 2020 புது ஆண்டினை கொண்டாடி வருகின்றனர் முதல் நாடாக நியூசிலாந்தும் அதனைத் தொடர்ந்து மற்ற மற்ற அண்டை நாடுகளும் கொண்டிவந்துள்ளன. நான் தற்பொழுது எழுதும் வரையும் ஏதாவது ஒரு நாடு இதனைக் கொண்டாடிக்கொண்டிருக்கும். இந்த வேளை இங்கே தமிழகத்தில் உள்ள சில பார்ப்பன கும்பல்கள் கொழுத்த வசூலில் ஈடுபட்டுள்ளன. எப்படி இந்த வசூல் என்றால் புத்தாண்டு சிறப்பு பூஜையின் வாயிலாகத்தான். சென்னை வடபழனி முருகன் கோயிலிலும், மயிலாப்பூர் கபாலி கோயிலும், திருவல்லிக்கேணி பார்த்த சாரதி கோயிலிலும் நேற்றைய தமிழ் பத்திரிக்கையின் மூலமாகவே விளப்பரப்படுத்தியிருந்தனர். என்னவென்றால் புத்தாண்டினை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும் என்று.
மொதல்ல இதுவே தப்பு!  ஒரு நல்ல சிந்தனை வாதியாக இருந்தால் அதென்னடா நடை திறப்புன்னு கேள்வி எழுப்பியிருக்கனும் ஆனால் அது இல்லை இங்கு.
இந்துக்கள் பெரும்பான்மையினர், நாங்கள் தான் அர்த்தமுள்ள இந்து, நாங்கள் தான் உயர்குலம், நாங்கள் தொடக்கூடிய ஜாதி, இந்து இந்துக்களுக்கான நாடு, ஹிந்துராஷ்டிரா என்று அதகளப் படுத்தி கதறிக்கொண்டிருக்கும் ஒரு கும்பல் இம்மக்களுக்கு தெரியப்படுத்தவேண்டும் ஏன் ஒரு மேற்கத்தியர்கள் கொண்டாடும் அதிலும் குறிப்பாக கிருஸ்துவர்கள் கொண்டாடும் புத்தாண்டினை கொண்டாட வேண்டும் அப்படி எதுவும் கொண்டாட சொல்லியும், கோயில் கருவறை ?( மூளையில் போடப்பட்ட விலங்கில் இருந்து மீளாமல் தவிக்கும் எளியோர்கள்) அதிகாலை திறக்கவேண்டும்? என்று எந்த ஆகம  விதிகளில் இருக்கிறது மேலும் சில இடங்களில் நள்ளிரவு 12 மணிக்கே சிறப்பு பூஜைகள் என்று சொல்லி தட்டின் மூலமாக கல்லாக் கட்டச் சொல்லி எந்த விதியில் இருக்கிறது என்று கேட்க வேண்டாமா?
இதனை நீங்கள் கேட்டால் ஆம் என்று சொல்வதற்கும் ஒரு பார்ப்பன கும்பல்கள் வரும்...இதில் நகைச்சுவைக்குரிய இரு கேளிக்கையும் நடந்திருக்கிறது ஒருவர் சாரணர் இயக்க தேர்தலில் கூட 50 ஓட்டு வாங்க போராடியவர் கடுமையாக எச்சரித்து சொல்லியிருந்தார் ஹிந்து, கோவில்கள் எதுவும் புத்தாண்டு கொண்டாடும் அன்று அதிகாலை கோவில்களை திறக்கக்கூடாது என்று ஆனால் அவர் இனத்தினைச் சேர்ந்த ஒரு கும்பல் இவர் பேச்சை செவிமடுக்காமல் தன் வருவாயின பெருக்கத்திற்கான வேலைகளை தொடர்ந்து செய்து கொண்டே இருக்கும்..ஆம் இவர்கள் இருக்கும் ஒரு புனித ஒப்பந்தம் நான் அடிக்கிற மாதிரி கத்துறேன் நீயும் வலிக்கிறமாதிரி கத்தும் எனும் டாக்சிசம் எனும் யுத்தி தான். இவர்களுக்கும் புத்தாண்டிற்கும் என்ன தொடர்பு? இவர்கள் தன் சொந்த மதத்தினரையே வருணபேதத்தில் பிரித்துவைத்து பிராமனன்,சத்திரியன், வைசியன், , சூத்திரன், பஞ்சமன் அப்படி இருக்க; மற்றவர்களை குறை சொல்வதற்திற்கு இவர்களுக்கு என்ன அருகதை இருக்கிறது. ஹிந்து மதம் என்பதும், அதில் உள்ள மூடச் சடங்கு மற்றும் சம்பிருதாயங்கள் அனைத்தும் ஒரு குறிப்பிட்டவர்களால், ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டது. நான் ஏன் இங்கு உருவாக்கப்பட்டது என்று சொன்னால் உருவானது என்று அது இயற்கை மாறாக உருவாக்கப்பட்டது என்றால் அது "செயற்கை"
எனவே தான் இந்த புத்தாண்டு "கைங்கர்ய" புத்தாண்டு என்று தலைப்பு வைத்துள்ளேன்.
நன்றி
நாள்: 01012020