1.1.20

கைங்கரிய" புத்தாண்டு!

தலைப்பைப் பார்த்தவுடன் சற்று ஆன்மிகம் சம்பந்தமுடையது என்று மனமகிழ்ச்சியடைவீர்களானால் அது நீங்கள் மிகவும் ஏமாளி மணமுடையவர்கள் என்று தான் பொருள் கொள்ளவேண்டும்.
நீங்கள் நினைக்கும் கைங்கர்யத்திற்கும் நான் இங்கு எழுதும் கைங்கர்யம் துளியும் தொடர்பில்லாது என்றால் அது மிகையாகாது.
ஆம்,  நான் இந்த "கைங்கர்ய" த்திற்கு தலைப்பிட்டதற்கு காரணம் பார்னீயத்தின் மூலமாக பார்ப்பனர்களை தோலுரிப்பதற்காகவே.
உலகெங்கும் உள்ள அனைவரும் ஆசை ஆசையாக நேற்றிரவு முதல் பெரும் மகிழ்ச்சியுடன் 2020 புது ஆண்டினை கொண்டாடி வருகின்றனர் முதல் நாடாக நியூசிலாந்தும் அதனைத் தொடர்ந்து மற்ற மற்ற அண்டை நாடுகளும் கொண்டிவந்துள்ளன. நான் தற்பொழுது எழுதும் வரையும் ஏதாவது ஒரு நாடு இதனைக் கொண்டாடிக்கொண்டிருக்கும். இந்த வேளை இங்கே தமிழகத்தில் உள்ள சில பார்ப்பன கும்பல்கள் கொழுத்த வசூலில் ஈடுபட்டுள்ளன. எப்படி இந்த வசூல் என்றால் புத்தாண்டு சிறப்பு பூஜையின் வாயிலாகத்தான். சென்னை வடபழனி முருகன் கோயிலிலும், மயிலாப்பூர் கபாலி கோயிலும், திருவல்லிக்கேணி பார்த்த சாரதி கோயிலிலும் நேற்றைய தமிழ் பத்திரிக்கையின் மூலமாகவே விளப்பரப்படுத்தியிருந்தனர். என்னவென்றால் புத்தாண்டினை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும் என்று.
மொதல்ல இதுவே தப்பு!  ஒரு நல்ல சிந்தனை வாதியாக இருந்தால் அதென்னடா நடை திறப்புன்னு கேள்வி எழுப்பியிருக்கனும் ஆனால் அது இல்லை இங்கு.
இந்துக்கள் பெரும்பான்மையினர், நாங்கள் தான் அர்த்தமுள்ள இந்து, நாங்கள் தான் உயர்குலம், நாங்கள் தொடக்கூடிய ஜாதி, இந்து இந்துக்களுக்கான நாடு, ஹிந்துராஷ்டிரா என்று அதகளப் படுத்தி கதறிக்கொண்டிருக்கும் ஒரு கும்பல் இம்மக்களுக்கு தெரியப்படுத்தவேண்டும் ஏன் ஒரு மேற்கத்தியர்கள் கொண்டாடும் அதிலும் குறிப்பாக கிருஸ்துவர்கள் கொண்டாடும் புத்தாண்டினை கொண்டாட வேண்டும் அப்படி எதுவும் கொண்டாட சொல்லியும், கோயில் கருவறை ?( மூளையில் போடப்பட்ட விலங்கில் இருந்து மீளாமல் தவிக்கும் எளியோர்கள்) அதிகாலை திறக்கவேண்டும்? என்று எந்த ஆகம  விதிகளில் இருக்கிறது மேலும் சில இடங்களில் நள்ளிரவு 12 மணிக்கே சிறப்பு பூஜைகள் என்று சொல்லி தட்டின் மூலமாக கல்லாக் கட்டச் சொல்லி எந்த விதியில் இருக்கிறது என்று கேட்க வேண்டாமா?
இதனை நீங்கள் கேட்டால் ஆம் என்று சொல்வதற்கும் ஒரு பார்ப்பன கும்பல்கள் வரும்...இதில் நகைச்சுவைக்குரிய இரு கேளிக்கையும் நடந்திருக்கிறது ஒருவர் சாரணர் இயக்க தேர்தலில் கூட 50 ஓட்டு வாங்க போராடியவர் கடுமையாக எச்சரித்து சொல்லியிருந்தார் ஹிந்து, கோவில்கள் எதுவும் புத்தாண்டு கொண்டாடும் அன்று அதிகாலை கோவில்களை திறக்கக்கூடாது என்று ஆனால் அவர் இனத்தினைச் சேர்ந்த ஒரு கும்பல் இவர் பேச்சை செவிமடுக்காமல் தன் வருவாயின பெருக்கத்திற்கான வேலைகளை தொடர்ந்து செய்து கொண்டே இருக்கும்..ஆம் இவர்கள் இருக்கும் ஒரு புனித ஒப்பந்தம் நான் அடிக்கிற மாதிரி கத்துறேன் நீயும் வலிக்கிறமாதிரி கத்தும் எனும் டாக்சிசம் எனும் யுத்தி தான். இவர்களுக்கும் புத்தாண்டிற்கும் என்ன தொடர்பு? இவர்கள் தன் சொந்த மதத்தினரையே வருணபேதத்தில் பிரித்துவைத்து பிராமனன்,சத்திரியன், வைசியன், , சூத்திரன், பஞ்சமன் அப்படி இருக்க; மற்றவர்களை குறை சொல்வதற்திற்கு இவர்களுக்கு என்ன அருகதை இருக்கிறது. ஹிந்து மதம் என்பதும், அதில் உள்ள மூடச் சடங்கு மற்றும் சம்பிருதாயங்கள் அனைத்தும் ஒரு குறிப்பிட்டவர்களால், ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டது. நான் ஏன் இங்கு உருவாக்கப்பட்டது என்று சொன்னால் உருவானது என்று அது இயற்கை மாறாக உருவாக்கப்பட்டது என்றால் அது "செயற்கை"
எனவே தான் இந்த புத்தாண்டு "கைங்கர்ய" புத்தாண்டு என்று தலைப்பு வைத்துள்ளேன்.
நன்றி
நாள்: 01012020

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக